Begin typing your search above and press return to search.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நன்கொடை வழங்கிய முஸ்லிம் பெண்மணி!
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நன்கொடை வழங்கிய முஸ்லிம் பெண்மணி!

By :
காஷ்மீர் சேர்ந்தவர் கலிதா பேகம் இவருக்கு 87 வயது ஆகிறது. தற்போது அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான சேவா பாரதிக்கு ரூபாய் 5 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த தொகையை அவர் ஹஜ் பயணத்துக்காக சேமித்து வைத்து இருந்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவில் இருக்கின்றதால் ஹஜ் பயணம் ஒத்திவைத்துள்ளார்.
சேவாபாரதி தொண்டர்கள் தற்போது ஊரடங்கு உத்தரவு இருப்பதால் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக இப்பணத்தை கலிதா பேகம் வழங்கியதாக ஆர்.எஸ்.எஸ் ஊடகப்பிரிவு தலைவர் அருண் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கலிதா பேகம் பாஜகவின் முன்னாள் அமைப்பான ஜன சங்கத்தின் தலைவராக இருந்த கர்ணல் பீர் முகமது கானின் மருமகள். அதுமட்டுமில்லாமல் இவருடைய மகன் பருக் கான் தற்போது காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக வேலை செய்து வருகிறார்.
Next Story