Begin typing your search above and press return to search.
தென்காசி, செங்கல்பட்டு புது மாவட்டங்கள் உதயம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !!
தென்காசி, செங்கல்பட்டு புது மாவட்டங்கள் உதயம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !!
By : Kathir Webdesk
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புது மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியையும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டையும் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்ட சபையில் அறிவித்தார்.
சட்டசபையில் 110 - வது விதியின் கீழ் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 - ஆக உயர்ந்துள்ளது.
Next Story