Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் தங்கமணி..

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் தங்கமணி..

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் தங்கமணி..
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 April 2020 4:27 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபாதை வியாபாரிகளுக்கு அரசு சார்பில் 110 பயனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாயை அமைச்சர் தங்கமணி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "ஊரடங்கு உத்தரவும் முடியும் வரை அரசுக்கு மதுக் கடையைத் திறக்கும் எண்ணமில்லை" என தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் முதலமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க 21 நாட்கள் ஊரடங்கு வருகின்ற 14 ஆம் தேதி வரை இருக்கிறது. எனவே ஊரடங்கு உத்தரவுக்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை, வாட்ஸ் அப்பில் வரக்கூடிய செய்திகள் எல்லாம் தவறான தகவல் மேலும் போதைக்கு அடிமையாக்கி பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பினால் கவுன்சிலிங் செய்வதற்குத் தயாராக உள்ளனர் என தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News