இந்தியாவில் உள்ள 134 கோடி மக்களைப் பாதுகாக்க ஒருவர் தான் இருக்கிறார், அவர் தான் மோடி - வரலட்சுமி சரத்குமார்!
இந்தியாவில் உள்ள 134 கோடி மக்களைப் பாதுகாக்க ஒருவர் தான் இருக்கிறார், அவர் தான் மோடி - வரலட்சுமி சரத்குமார்!
By : Kathir Webdesk
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது செல்போன் டார்ச் லைட்டுகளை ஒளிர செய்து, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் தங்களின் பங்களிப்பும் உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார், இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் தமிழ் திரைப்பட நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆதரவு தெரிவித்த வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது, ஒரு பிரச்சனை கண்டுபிடிப்பது மிக சுலபம் ஆனால் அதற்குத் தீர்வு கண்டுபிடிப்பது மிகக் கடினம், இந்தியா போன்ற 134 கோடி மக்களைப் பாதுகாக்க ஒரு ஆள் தான் இருக்கிறார் அவர் தான் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி! கேள்வி கேட்கலாம், எதிர்காலம் ஆனால், இது அதற்கான சரியான நேரம் இல்லை, நேரம் வரும்போது அதை செய்யலாம் இப்போது நம் ஒற்றுமையுடன் இருந்து கொரோனா வைரசை எதிர்க்க வேண்டும், ஜாதி, மதம் பார்த்து கொரோனா வைரஸ் வருவதில்லை, இந்த நேரத்தில் நமது பிரதமருடன் நிற்கலாம் எனக் கூறினார்.
https://twitter.com/varusarath/status/1246777785470709766?s=19
மேலும் பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் நடவடிக்கைகள் நன்றியைத் தெரிவித்து. பிரதமர் சொன்னது போல நானும் இன்று எனது வீட்டில் விளக்கேற்ற போகிறேன், நீங்களும் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.