Kathir News
Begin typing your search above and press return to search.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வீடு வீடாகச் சென்று மத வழிபாடு செய்த பாதிரியார் - வைரஸ் தொற்று உறுதியானதோடு ₹ 25,000 அபராதம்.!

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வீடு வீடாகச் சென்று மத வழிபாடு செய்த பாதிரியார் - வைரஸ் தொற்று உறுதியானதோடு ₹ 25,000 அபராதம்.!

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வீடு வீடாகச் சென்று மத வழிபாடு செய்த பாதிரியார் - வைரஸ் தொற்று உறுதியானதோடு ₹ 25,000 அபராதம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 3:23 PM GMT

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவியதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் வீடு வீடாகச் சென்று வழிபாடு செய்த பாதிரியாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பட்டுமலா என்ற பகுதியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் பீர்மேடு பஞ்சாயத்தின் 13வது வார்டில் வீடு வீடாகச் சென்று மத வழிபாடு நடத்தியுள்ளார். இந்த குறிப்பிட்ட பகுதி அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த பாதிரியார் காவல் துறையினர் மற்றும் சுகாதார பணியாளர்களால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து பீர்மேட்டில் உள்ள தனிமைப்படுத்துதல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சுயதனிமையைக் கடைபிடிக்குமாறும் ஒருவர் மற்றவரின் வீடுகளுக்குச் செல்லக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிரியார் வீடு வீடாகச் சென்று வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியதால் அவருக்கு ₹ 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என மலையாள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News