Begin typing your search above and press return to search.
கொரோனா முன்னெச்சரிக்கை.. மருந்து கடையில் சமூக இடைவெளி.. கோலமாவில் வட்டமிட்ட பெண்.!
கொரோனா முன்னெச்சரிக்கை.. மருந்து கடையில் சமூக இடைவெளி.. கோலமாவில் வட்டமிட்ட பெண்.!

By :
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதனையடுத்து ஆட்சியர் மலர்விழி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றார்.
இந்நிலையில், தர்மபுரி அருகே உள்ள பாப்பாரப்பட்டியில் உள்ள ஒரு மருந்து கடையில் முன்னெச்சரிக்கையாக கடையின் முன்புறமாக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், பொதுமக்கள் மருந்து வாங்க வரும்பொழுது சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக பெண் ஒருவர் கோலமாவில் வட்டமிட்டார்.
இவரை போன்று மாவட்டத்தில் பல்வேறு மருந்து கடையிலும் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story