Begin typing your search above and press return to search.
பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சம் வழங்கிய தன்ராஜ் பிள்ளை..
பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சம் வழங்கிய தன்ராஜ் பிள்ளை..
By : Kathir Webdesk
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். இதனால் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் மோடி அவர்கள் மக்களிடம் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கலாம் என அறிவித்திருந்தார். இதற்கு நடிகர்கள், பிரபலங்கள், முக்கிய நிறுவனங்கள் உள்பட பலரும் பிரதமரின் நிவாரண நிதிக்கு முடிந்த நன்கொடையை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது பிரதமரின் நிவாரண நிதிக்கு முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை ரூ 5 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
Next Story