மீன் கறி பத்தி பேசுறவங்க, ஏன் மான் கறி பத்தி பேசல..? நடிகர் சூரிக்கு ஒரு சட்டம்.. தி.மு.க இளவரசர்களுக்கு ஒரு சட்டமா..?
மீன் கறி பத்தி பேசுறவங்க, ஏன் மான் கறி பத்தி பேசல..? நடிகர் சூரிக்கு ஒரு சட்டம்.. தி.மு.க இளவரசர்களுக்கு ஒரு சட்டமா..?
By : Kathir Webdesk
நடிகர்கள் விமல், சூரியுடன் 2 இயக்குனர்கள் கடந்த 17-ந்தேதி கொடைக்கானல் வந்துள்ளனர். இங்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு வனத்துறையிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்றுதான் செல்லவேண்டும். ஆனால் இவர்கள் அனுமதி பெறாமல் ஏரிக்கு சென்று மீன்பிடித்து உள்ளனர்.
இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியானது. வனத்துறை அதிகாரிகள் இல்லாத நிலையில் சில ஊழியர்கள் உதவியுடன் நடிகர்கள் விமல், சூரி உள்பட சிலர் பேரிஜம் ஏரிக்கு சென்றுள்ளனர்.
தடை விதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற இவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏரியில் மீன் பிடித்ததிற்கே இந்த அளவுக்கு தண்டனை கிடைக்கும் போது, சமீபத்தில் மான் வேட்டை விவகாரத்தில் திமுக சிக்கியது விவாதப்பொருளாக உருவெடுத்துள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய தி.மு.க. எம்.எல்.ஏ.வான இதயவர்மன் அனுமதி இல்லாத கள்ளத்துப்பாக்கியும், ஏகப்பட்ட தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. இவர் அடிக்கடி வேட்டையாடப் போவது வழக்கம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி வேட்டைக்குப் போகும்போது மானை வேட்டையாடி வருவார் என்று சொல்லப்படுகிறது.
அப்படி வேட்டையாடிய மானின் இறைச்சியை சென்னையில் தி.மு.க. தலைவரின் வீட்டுக்கும் கொடுத்துள்ளதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
சென்னையில் தி.மு.க. தலைவர் வீட்டுக்கும் சப்ளை செய்திருப்பதாக இதயவர்மனின் உதவியாளர்கள் கூறியுள்ளார்களாம். இதையடுத்து ஸ்டாலின், உதயநிதியிடமும் விசாரணை நடைபெறும் என்றே சொல்லப்படுகிறது.
மீன் கறிக்கே அபரதாம் வழக்கு பதிவு என்கிற ரேஞ்சுக்கு தண்டனை இருக்கும் போது, மான் கறிக்கு கட்டாயம் ஜெயில் உறுதி என்று சமூக வலைதளங்களில் பலரும் கமாண்ட் செய்து வருகின்றனர்.