Begin typing your search above and press return to search.
மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தொழிற்சாலைகள் இயங்குகிறதா என டிரோன் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு.!
மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தொழிற்சாலைகள் இயங்குகிறதா என டிரோன் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு.!

By :
ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் தொழிலாளர்சாளைகளை நிபந்தனைகளுடன் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு பகுதியில் இன்று முதல் சில அத்தியாவசிய பொருட்கள் தயார் செய்யும் தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தொழிற்சாலைகள் இயங்குகிறதா என திருநள்ளாறு காவல் நிலைய அதிகாரிகள் டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றுகின்றார்களா, சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றார்களா போன்றவற்றை கண்காணித்து வருகின்றார்கள். மேலும் அத்தியாவசியமின்றி வெளியே சுற்றித் திரிந்தவர்களை போலீசார் எச்சரித்தும் அனுப்பினர்.
Next Story