மார்ச் 10 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்..!
மார்ச் 10 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்..!
By : Kathir Webdesk
தமிழகத்தில் மார்ச் 10 ஆம் தேதியன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. போலியோ நோயை ஒழிப்பதற்காக 1994 ஆம் ஆண்டு முதல் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இரண்டு தவணையாக 5 வயதுக்கு உள்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.சில காரணங்களால் பிப்ரவரி 3-ஆம் தேதி நடப்பதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித் திருந்தது. தற்போது தமிழகத்தில் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்கள் நிறுவ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும். குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனை சாவடிகள், விமானநிலையங்களில் வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இதற்காக சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சொட்டு மருந்து முகாம்களில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.