Kathir News
Begin typing your search above and press return to search.

மார்ச் 10 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்..!

மார்ச் 10 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்..!

மார்ச் 10 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Feb 2019 1:53 PM GMT


தமிழகத்தில் மார்ச் 10 ஆம் தேதியன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. போலியோ நோயை ஒழிப்பதற்காக 1994 ஆம் ஆண்டு முதல் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இரண்டு தவணையாக 5 வயதுக்கு உள்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.சில காரணங்களால் பிப்ரவரி 3-ஆம் தேதி நடப்பதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித் திருந்தது. தற்போது தமிழகத்தில் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்கள் நிறுவ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும். குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனை சாவடிகள், விமானநிலையங்களில் வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இதற்காக சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சொட்டு மருந்து முகாம்களில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News