Kathir News
Begin typing your search above and press return to search.

தயாரிப்பாளராகும் பிரசன்னா!

தயாரிப்பாளராகும் பிரசன்னா!

தயாரிப்பாளராகும் பிரசன்னா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 April 2020 10:23 AM GMT

2014ம் ஆண்டு கேம் சேஞ்சர் எண்டர்டெய்மெண்ட் என்ற பெயரில் சினேகாவின் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர் பிரசன்னா - சினேகா தம்பதியினர். பிரசன்னா நாயகனாக நடிக்கும் படத்தினை தயாரிக்கவிருந்த அந்நிறுவனம் சில மாதங்களிலேயே அப்படத்தினை கைவிட்டது. அதன் பின்னர் அந்த தயாரிப்பு நிறுவனம் எந்த படத்தினையும் தயாரிக்கவில்லை.

இந்நிலையில் பிரசன்னா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடினார். அதில் ஒரு ரசிகர் 'கண்ட நாள் முதல்' தனக்கு விருப்பமான படம் என்றும் அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா, அதற்க்கு தயாரிப்பாளராவீர்களா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரசன்னா, அதற்கான வேலைகள் துவங்கியிருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் தான் தயாரிப்பளராவதை பிரசன்னா உறுதி செய்துள்ளார். 2014ம் ஆண்டு துவக்கப்பட்ட அதே நிறுவனத்தின் மூலம் படம் தயாரிக்கிறாரா அல்லாது வேறு பெயரிலா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News