கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.!
கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.!
By : Kathir Webdesk
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
மேலும் தமிழ்நாட்டிலும் கொரோனா பரவி வரும் நிலையில் ஈரோடு பெருந்துறையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஈரோட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 60 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் கர்ப்பிணி பெண்கள். இதில் ஈரோடு பெருந்துறையை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அங்கு இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் தாயும், குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குழந்தையை தனிமையில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் மற்றும் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை கண்டு பிடிக்க 3 வாரங்கள் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.