Kathir News
Begin typing your search above and press return to search.

உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சரக்கு கிடைக்குது - போலீசாரை மிரள வைத்த புதுச்சேரி இளைஞர்கள்!

உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சரக்கு கிடைக்குது - போலீசாரை மிரள வைத்த புதுச்சேரி இளைஞர்கள்!

உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சரக்கு கிடைக்குது - போலீசாரை மிரள வைத்த புதுச்சேரி இளைஞர்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 12:57 PM GMT

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது மேலும் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 18 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளாதல் சரக்கு கிடைக்காமல் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுவை நான்கு மடங்கு வரை அதிக விலைக்கு வாங்கி குடித்து வருகின்றனர். மேலும், அவ்வப்போது சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.


இந்நிலையில் புதுச்சேரி ரயில் நிலையம் அருகே சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதாக ஒதியஞ்சாலை போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் ரயில் நிலையம் ஒட்டியுள்ள வானராப்பேட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். பின்னர், ரயில் தண்டவாளம் அருகே பதுக்கி வைத்து 600-க்கும் மேற்பட்ட குவாட்டர்களை பறிமுதல் செய்து மேலும் அவர்களுக்கு உதவியாக இருந்த 4 பேர் என மொத்தமாக 6 பேரை கைது செய்தனர்.


தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட இருந்த ரூபாய் 40ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை மற்றும் கைது செய்யப்பட்டவர்களை கலால்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். காவல்துறையினரை மிரள வைக்கும் அளவிற்கு மதுவை பதுக்கி வைத்து இருந்த இளைஞர்களை போலீசார் பாணியில் கவனித்தும் அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News