மனைவியுடன் பேட்மிண்டன் விளையாடும் புஜாரா.!
மனைவியுடன் பேட்மிண்டன் விளையாடும் புஜாரா.!
By : Kathir Webdesk
சினாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21நாட்களுக்கு விதித்துள்ளது.
இதனால் இந்தியா கிரிக்கெட் வீரர்கள் தங்களின் வீட்டில் பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தோடு பொழுதை கழித்தும், அவர்களோடு மகிழ்ந்தும் வருகிறார்கள்.
இளம் வீரர்கள் வீட்டில் இருக்கும் சிறிய வேலைகளை செய்தும் மற்றும் கல்யாணம் செய்தவர்கள் மனைவிக்கு உதவி செய்தும் குழந்தையோடு விளையாடியும் நேரத்தில் கழித்து வருகிறார்கள். மேலும் சமூக வளையதளங்கள் பயன் படுத்தியும் வருகின்றனர்.
இந்த வகையில் இந்தியா வீரர் புஜாரா அவருடைய மனைவி பூஜா உடன் பேட்மிண்டன் விளையாடி நேரத்தை கழித்து வருகிறார். இவர் மனைவிக்கு பேட்மிண்டன் விளையாடுவது சொல்லிக்கொடுத்து வருகிறார்.