Kathir News
Begin typing your search above and press return to search.

“ராகுல் காந்தி, கீழ்தரமான அரசியல் செய்கிறார் ” - காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் பாய்ச்சல்!!

“ராகுல் காந்தி, கீழ்தரமான அரசியல் செய்கிறார் ” - காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் பாய்ச்சல்!!

“ராகுல் காந்தி, கீழ்தரமான அரசியல் செய்கிறார் ” - காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் பாய்ச்சல்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Aug 2019 6:15 AM GMT



காஷ்மீரில் அமைதி திரும்பி வரும் நிலையில் அதனை சீர்குலைக்கவும், அங்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து அதை வைத்து அரசியல் செய்யவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டார்.


இதற்காக கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் சிலரை அழைத்துக்கொண்டு ஸ்ரீநகருக்கு சென்றார். அவர்களின் தவறான நோக்கத்தை புரிந்துகொண்ட காஷ்மீர் நிர்வாகம் அவர்களை திருப்பி அனுப்பியது.


இது தொடர்பாக காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:-


காஷ்மீர் குறித்து கூறிவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரை காஷ்மீருக்கு வரும்படி அழைத்தேன். ஆனால் எனது அழைப்பை வைத்து அவர் அரசியல் செய்கிறார். காஷ்மீருக்கு எதிர்கட்சியினர் சிலருடன் வந்து, கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும், ஊடகங்களில் உரையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


அவரது கீழ்தரமான அரசியலை புரிந்து கொண்டதையடுத்து, அவருக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றேன்.


காஷ்மீரில் அனுமதிக்கப்படாததையடுத்து டில்லி திரும்பிய ராகுல், காஷ்மீர் தொடர்பான பொய் தகவல்களை தெரிவித்தார். ராகுல் கூறும் அக்கருத்துக்களை இந்தியாவுக்கு எதிராக பாக்., பயன்படுத்தக்கூடும். முக்கிய விவகாரங்களில் தேச நலனை முதன்மையாக கொள்ள வேண்டும். அதனை தரம்தாழ்ந்த அரசியல் லாபங்களுக்காக ராகுல் பயன்படுத்தக்கூடாது.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News