"கட்சி தொடங்க அனைத்து உதவிகளும் செய்ய தயார்" அழகிரி குடுத்த வாக்கு - வழக்கம்போல் அமைதி காத்த ரஜினி #Rajinikanth #MKAlagiri
"கட்சி தொடங்க அனைத்து உதவிகளும் செய்ய தயார்" அழகிரி குடுத்த வாக்கு - வழக்கம்போல் அமைதி காத்த ரஜினி #Rajinikanth #MKAlagiri
By : Kathir Webdesk
ரஜினியின் அரசியல் வரவை அவரின் ரசிகர்கள் மட்டுமல்ல அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் எதிர்நோக்குகின்றனர். சிலர் இவர் வந்தால் நாம் அவ்ளோதான் காலி என்கிற ரேஞ்சில் பலரோ அவர் ஆரமிக்கட்டும் நாம் இணைந்து கொள்ளலாம் எனவும்.
அந்த வகையில் கருணாநிதி'யின் மகனும், தி.மு.க'வில் இருந்து தற்போதைய தலைவர் ஸ்டாலினால் ஓரங்கட்டபட்ட அவரது அண்ணனுமாகிய மு.க.அழகிரி தற்பொழுது ரஜினியின் அரசியல் வருகையை எதிர்நோக்கியுள்ளார். காரணம் ரஜினியின் மீது கொண்டுள்ள நட்பு, தனது நண்பனின் அரசியல் வருகை எக்காரணத்தை கொண்டும் சறுக்கிவிடகூடாது என மு.க.அழகிரி தெளிவாக உள்ளார். அந்த வகையில் தற்பொழுது பிரபலங்கள் கொரோனோ ஊரடங்கினால் வெளியில் செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே இருக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தான் மு.க.அழகிரி ரஜினி அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார், "உங்களுக்கு என்ன சப்போர்ட் வேணும்னாலும் சரி மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நான் செய்ய தயார்" என உறுதியளித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் வழக்கமான புன்னகையுடன் ரஜினி அவர்கள் அமைதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.