Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா நிவாரண உதவித்தொகை 1000 ரூபாயை வீடுகளுக்கே சென்று ரேஷன்கடை ஊழியர்கள் வழங்க வேண்டும்..

கொரோனா நிவாரண உதவித்தொகை 1000 ரூபாயை வீடுகளுக்கே சென்று ரேஷன்கடை ஊழியர்கள் வழங்க வேண்டும்..

கொரோனா நிவாரண உதவித்தொகை 1000 ரூபாயை வீடுகளுக்கே சென்று ரேஷன்கடை  ஊழியர்கள் வழங்க வேண்டும்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 April 2020 5:11 AM GMT

கொரோனா நிவாரண உதவித்தொகை 1000 ரூபாயை வீடுகளுக்கே சென்று ரேஷன்கடை ஊழியர்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நேற்று (3ம் தேதி) வரை வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.1000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி முடிவடைந்ததும், வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும்போதே ரூபாய்1000 பணத்தையும் வழங்க வேண்டும். இதை உறுதிபடுத்தும் வகையில் இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வழங்க மட்டுமே டோக்கன் வழங்க வேண்டும். நிவாரண உதவித்தொகையான ரூபாய் 1000 ரொக்க பணத்தையும் வழங்கப்பட வேண்டும்.

நாளை (5ம் தேதி) ரேஷன் கடைகள் இயங்காது. அன்றைய தினமும் நிவாரண தொகை வீடு வீடாக சென்று வழங்கப்பட வேண்டும். 6ம் தேதி டோக்கன் வழங்கப்பட்ட அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். 7ம் தேதியில் இருந்து, எக்காரணத்தை கொண்டும் நிவாரண உதவித்தொகை 1000 ரேஷன் கடைகளில் வழங்க கூடாது. வீடுகளுக்கு சென்றுதான் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News