சந்தடி கேப்பில் சத்தமே இல்லாமல் 4,000 பயங்கரவாதிகளின் பெயர்களை கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கிய பாகிஸ்தான்!
சந்தடி கேப்பில் சத்தமே இல்லாமல் 4,000 பயங்கரவாதிகளின் பெயர்களை கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கிய பாகிஸ்தான்!

நியூயார்க்கை தளமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு நிறுவனமானது, பாகிஸ்தான் தனது பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட 4,000 பயங்கரவாதிகளின் பெயர்களை சத்தமில்லாமல் நீக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது. நீக்கப்பட்டவர்களில் எல்.ஈ.டி தலைவர் மற்றும் மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி மற்றும் பலர் உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு நிறுவனமான காஸ்டெல்லம் குழு மேற்கோள் காட்டியதில், அக்டோபர் 2018 இல் பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் 7,600 பெயர்களைக் கொண்டிருந்தது. புதிய தரவு மூலங்களைச் சேர்ப்பதே AI இன் பணி என்பதால், மார்ச் 9 முதல் 27 வரையிலான தரவுகளில் பாகிஸ்தான் 1,069 பெயர்களை தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகவும், அந்த பெயர்கள் அனைத்தும் நாட்டின் குறிக்கப்பட்ட பட்டியலில் தோன்றியதாகவும் அது குறிப்பிட்டது.
மார்ச் 27 க்குப் பிறகு, 800 பெயர்களும் அகற்றப்பட்டன, இறுதியில் 3800 பெயர்கள் இதுவரை எந்தவொரு விளக்கமும் அல்லது அறிவிப்பும் இல்லாமல் பொதுமக்களுக்காக குறிப்பிடப்பட்ட பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத கண்காணிப்பு பட்டியல் பராமரிக்கப்படுவது நிதி நிறுவனங்கள் அவற்றுடன் வர்த்தகம் செய்வதைத் தவிர்க்க அல்லது பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பண பரிவர்த்தனைகளைச் எச்சரிக்கையாக செயல்படுத்த உதவுகிறது.
EXCLUSIVE: We detected that Pakistan removed ~4K names from its terrorist watchlist. See our report https://t.co/0LJFtNWuDX and the Wall Street Journal article about our discovery https://t.co/tSQWZnapIR Removed possibly include terrorist leaders sanctioned by OFAC, EU and UN pic.twitter.com/zhc5ev5hEW
— Castellum.AI (@CastellumAI) April 20, 2020