Kathir News
Begin typing your search above and press return to search.

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்களுக்கு ரூ 3 ஆயிரம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர்.. மகிழ்ச்சியில் செய்தியாளர்கள்..

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்களுக்கு ரூ 3 ஆயிரம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர்.. மகிழ்ச்சியில் செய்தியாளர்கள்..

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்களுக்கு ரூ 3 ஆயிரம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர்.. மகிழ்ச்சியில் செய்தியாளர்கள்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 April 2020 12:43 PM GMT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுகிய காலத்தில் எல்லோரின் மனதிலும் இடம்பிடித்தார் என்பதற்கு உதாரணமாக விளங்குவதற்கு காரணம் பல உண்டு இருந்தாலும் நல்லது கெட்டதை வெளிப்படுத்தும் ஊடகத்துறையினரின் வறுமை நிலை அறிந்த முதல்வராக செயல்படுவதும் ஒரு காரணம் என எல்லோராலும் பேசப்படுகிறது அது உண்மையே ஆகும்

கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பொது ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி வருவதால் பொதுமக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை உணர்ந்து தமிழக அரசு நிவாரண உதவி வழங்கி வருகிறது அந்தவகையில் பத்திரிக்கை செய்தியாளர்கள் சொற்ப ஊதியத்தில் பணியாற்றுவதை அறிந்த முதல்வர் அனைத்து செய்தியாளர்களுக்கும் ஊக்கத்தொகை யாக ரூபாய் மூன்று ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

முதல்வரின் அறிவிப்பால் தமிழக செய்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்து வருகின்றனர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வரின் நல்லென்னத்தை வெளிபடுத்தும் செயலாக பார்க்கபடுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News