Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்த ஒருவரின் குடும்பமே படுகொலை! மேற்கு வங்கத்தில் நடந்த கொடூரம்! வாய் திறக்காத ஊடகங்கள்!!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்த ஒருவரின் குடும்பமே படுகொலை! மேற்கு வங்கத்தில் நடந்த கொடூரம்! வாய் திறக்காத ஊடகங்கள்!!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்த ஒருவரின்  குடும்பமே படுகொலை! மேற்கு வங்கத்தில் நடந்த கொடூரம்! வாய் திறக்காத ஊடகங்கள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Oct 2019 9:22 AM GMT


மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர் கோபால். ஆரம்ப பள்ளி ஆசிரியர். இவருக்கு எட்டு வயது மகன் உள்ளார். அவரது மனைவி கர்ப்பிணி. இந்த நிலையில் நேற்று முன் தினம் அவரது வீட்டில் கோபால் மற்றும் அவரது மனைவி, எட்டு வயது மகன் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர், இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறை இரத்த வெள்ளத்தில் கிடந்த கோபால் பால் குடும்பத்தின் சடலங்களை பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்


இது குறித்து மேற்கு வாங்க காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இந்து மதத்தினர் கொல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது. இது மம்தாவின் ஆட்சி இது குறித்து தகுந்த விளக்கமோ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியோ வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வருகிறார்.


அங்கு வளர்ந்து வரும் கட்சியாக பாஜக இருக்கிறது, அவர்கள் மத்தியில் பயத்தை உருவாக்குவதற்கு இது போன்ற சம்பவங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செய்து வருவதாக அங்குள்ள பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் மேற்கு வங்க ஆர்எஸ்எஸ் செயலாளர் ஜிஷ்ணு பாசு செய்தி நிறுவனத்திடம் இச்சம்பவம் குறித்து கூறுகையில் பாதிக்கப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர், இவர் வாராந்திர மிலனுடன்' தொடர்புடையவர் என்று கூறினார்.


மணிரத்னம்பற்றி வாய் திறந்த தமிழக ஊடகங்கள் இதை பற்றி வாய் திறக்காதது ஏனோ?


இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் தனது ட்விட்டரில் இந்த செயல் மிகவும் கொடூரமானது இது எனது மனசாட்சியை உலுக்கியது என்று பா.ஜ.க தலைவர் சம்பிட் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News