Kathir News
Begin typing your search above and press return to search.

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” வாட்ஸ்அப் குழு நடத்திய சதாம் குரேஷி கைது! தமிழக தேசவிரோத கும்பல்களுக்கும் சிக்கல்!!

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” வாட்ஸ்அப் குழு நடத்திய சதாம் குரேஷி கைது! தமிழக தேசவிரோத கும்பல்களுக்கும் சிக்கல்!!

“பாகிஸ்தான் ஜிந்தாபாத்” வாட்ஸ்அப் குழு நடத்திய சதாம் குரேஷி கைது! தமிழக தேசவிரோத கும்பல்களுக்கும் சிக்கல்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2019 8:10 AM GMT



பீகார் மாநிலத்தின் சம்பாரன் மாவட்டம், பெட்டியாவைச் சேர்ந்தவன் சதாம் குரோஷி. இவன், “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்தி இந்தியாவுக்கு எதிரான தேசதுரோக கருத்துக்களை பதிவிட்டும், பகிர்ந்தும் வந்துள்ளான். இந்து மதத்திற்கு எதிரான விஷத்தையும் பரப்பி வந்துள்ளான்.


இவைகளை உன்னிப்பாக கவனித்து வந்த சைபர் கிரைம் போலீசார் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” வாட்ஸ்அப் குழுவின் அட்மினான சதாம் குரோஷியை கைது செய்தனர். இவனுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.


இவனிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர், இவன் மீது 153 ஏ, 153 பி, மற்றும் 298 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


விசாரணைக்கு பின்னர் சதாம் குரோஷி, ஜெயிலில் அடைக்கப்பட்டான்.


சமூக ஊடகங்கள் மூலம் சட்டவிரோத, தேசவிரோத கருத்துக்களை பரப்புபவர்கள் மீது இந்தியா முழுவதும் நடவடிக்கைகள் இனி பாய உள்ளது. வாட்ஸ்அப் குழுக்கள் அனைத்தும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


எனவே தமிழகத்தில் உள்ள பல தேசவிரோத கும்பல்கள், விரைவில் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News