Kathir News
Begin typing your search above and press return to search.

#SBI வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவை தடை பற்றிய முக்கிய அறிவிப்பு!

#SBI வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவை தடை பற்றிய முக்கிய அறிவிப்பு!

#SBI வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவை தடை பற்றிய முக்கிய அறிவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Jun 2020 7:05 AM GMT

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் வாடிக்கையாளர்களுக்கு என்று ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டு இருக்கிறது. வரும் 21 ஜூன் 2020, ஞாயிற்றுக்கிழமை அன்று, எஸ்.பி.ஐ வங்கியின் செயலிகளில், சில புதிய டெக்னாலஜி சார்ந்த வசதிகளைச் சேர்க்க இருக்கிறார்களாம்.

இப்படி அப்ளிகேஷனில் புதிய வசதிகளைச் சேர்க்கும் போது, ஆன்லைன் பேக்கிங் வசதிகளைப் பயன்படுத்துவதில் கொஞ்சம் சிக்கல் வரலாம் அல்லது ஆன்லைன் சேவை தடைபடலாம் என தன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து இருக்கிறது. எனவே எஸ்.பி.ஐ வங்கி சேவைகளை அதற்குத் தகுந்தாற் போல திட்டமிட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி இருக்கிறது.

எனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள், 21 ஜூன் 2020, ஞாயிற்றுக்கிழமை அன்று பணப் பரிமாற்றங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நாம் பாட்டுக்கு பணப் பரிமாற்றம் செய்யும் போது, இந்த டெக்னாலஜி மாற்றத்தில் சிக்கிக் கொண்டால் பின், பணத்தை திரும்பப் பெற வங்கிக்கு அலைய வேண்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ ஊரடங்கு சிக்கல்கள் எதிர்கொள்ளும் பட்சத்தில் SBI இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான முன்அறிவிப்பாக கருதப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News