Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து திரும்பிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து திரும்பிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து திரும்பிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 April 2020 12:35 PM GMT

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் சென்ற மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை விளையாட இருந்தது. இந்த தொடர் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெற இருந்தது.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்ற முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு லக்னோவில் நடைபெற இருந்த இரண்டாவது போட்டியும் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால். தென்னாப்பிரிக்கா வீரர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டனர். இவர்களை 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டு அதில் எந்த ஒரு வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென்னாபிரிக்காவிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

Source: https://www.maalaimalar.com/news/sports/2020/04/03143518/1383986/India-returned-SA-players-Covid19-negative-no-symptoms.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News