Kathir News
Begin typing your search above and press return to search.

ராஞ்சியில் துப்பிய 10 ரூபாய் நோட்டை துப்புரவு தொழிலாளர்களின் மீது வீசிய மக்கள்! இதனால் சுத்தம் செய்ய மறுப்பு.!

ராஞ்சியில் துப்பிய 10 ரூபாய் நோட்டை துப்புரவு தொழிலாளர்களின் மீது வீசிய மக்கள்! இதனால் சுத்தம் செய்ய மறுப்பு.!

ராஞ்சியில் துப்பிய 10 ரூபாய் நோட்டை துப்புரவு தொழிலாளர்களின் மீது வீசிய மக்கள்! இதனால் சுத்தம் செய்ய மறுப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 April 2020 1:53 PM GMT

ராஞ்சியில் உள்ள ஹிந்த்பிரி என்ற பகுதியில்p வசிப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் கிருமி நாசினி அடிக்க வரும் துப்புரவுத் தொழிலாளர்கள் மீது துப்பியதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் அனைத்து பகுதியிலும் கிருமி நாசினி அடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஞ்சியில் உள்ள ஹிந்த்பிரியில் உள்ள மக்கள் தங்கள் மாடியில் மேல் நின்று கிருமி நாசினி தெளிக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் மீது துப்பியுள்ளனர். இது குறித்து தொழிலாளர்கள் துணை நகராட்சி ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இதனை பற்றி தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து அவர்கள் மீது துப்பியதால் அந்த பகுதியை சுத்தப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளனர். இதன் இடையில் அந்த நபர்களுக்கு மீது வழக்கு பதிவு செய்யுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஏப்ரல் 4ஆம் தேதி அந்த பகுதியின் கவுன்சிலர் முகமது அஸ்லம் சுத்தம் செய்ய வரும் முகேஷ் உமர் என்பருடன் சண்டையிட்டுள்ளார்.

மேலும் தகவல்களின்படி, சில பேர் 10 ரூபாய் நோட்டுகளில் துப்பி, துப்புரவுத் தொழிலாளர்கள் மீது வீசியுள்ளனர். அமலாக்க அதிகாரி ராஜேஷ் குப்தா பின்னர் அந்த பணியை செய்யாமல் திரும்பினார்.

கவுன்சிலர் சண்டையிட்ட பிறகு அந்த ஹிந்த்பிரி பகுதிக்கு தொழிலாளர்கள் அனுப்பப்பட்டன.

இப்போது, ​​மீண்டும் அவர்கள் அந்த பகுதியை சுத்திகரிக்க மறுக்கிறார்கள் என்பதற்காக சில பேர் போராட்டத்தைத் செய்ய போவதாக கூறியுள்ளனர். பின்னர் துணை நகராட்சி ஆணையர் அவர்களிடம் பேசுகையில் எந்த ஒரு நெருக்கடியின் போதும் புரட்சிசெய்வது முறையற்றது செயல் என்று கூறினார். மேலும், தவறு செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

Source: https://www.opindia.com/2020/04/hindpuri-ranchi-sanitation-workers-refuse-to-disinfect-area-as-people-spit-on-them/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News