ஸ்டாலினின் வெளிநாட்டு பயண மர்மங்கள்! கராத்தே தியாகராஜன் வெளியிட்டார்!!
ஸ்டாலினின் வெளிநாட்டு பயண மர்மங்கள்! கராத்தே தியாகராஜன் வெளியிட்டார்!!
By : Kathir Webdesk
முன்னாள் சென்னை மாநகர மேயர், கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள், அதனை தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடந்தகால நிகழ்வை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
ஸ்டாலின் உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்தபோது, 2007-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதியன்று, தனது நண்பருடன் தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றார். அவர் விமானம் ஏறும் போதுதான் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கே தெரியும்.
மேலும் அந்தப் பயணம் மத்திய அரசின் அனுமதி பெறாமல் சென்றார் என்று அப்போது சர்ச்சைகள் எழுந்தன என்பதை நினைவூட்டுகிறேன்.
இவ்வாறு கராத்தே தியாகராஜன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார் .