Kathir News
Begin typing your search above and press return to search.

மாமல்லபுரம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு சூப்பர்! தமிழக அரசுக்கு சீனா பாராட்டு கடிதம்.!

மாமல்லபுரம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு சூப்பர்! தமிழக அரசுக்கு சீனா பாராட்டு கடிதம்.!

மாமல்லபுரம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு சூப்பர்! தமிழக அரசுக்கு சீனா பாராட்டு கடிதம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Oct 2019 5:27 AM GMT



மாமல்லபுரத்தில் நடைபெற்ற சீன – இந்திய தலைவர்கள் சந்திப்பு மாநாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்ததாக ஏற்கனவே பிரதமர் மோடி தமிழக அரசை பாராட்டினார். தற்போது சீனாவும் தமிழக அரசை பாராட்டியுள்ளது.


தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் இம்மாதம் 11, 12 ஆம் தேதிகளில் இந்திய, சீனத் தலைவர்களுக்கு இடையிலான இரண்டாவது உச்சநிலை மாநாடு நடைபெற்றது.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸி ஜின்பிங் இடையிலான அந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்ததாகப் பாராட்டியும் நன்றி தெரிவித்தும் இந்தியாவிற்கான சீனத் தூதர் சன் வெய்டங் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.


வழிநெடுக வரவேற்பு, கண்கவர் கலைநிகழ்ச்சிகள், வியக்கவைத்த விருந்தோம்பல் ஆகியவற்றுக்காக உளப்பூர்வமாக நன்றி கூறிக்கொண்ட திரு வெய்டங், இருநாட்டு மக்களிடையே அதிகமான கலாசாரப் பரிமாற்றங்கள் இடம்பெறவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News