புதிதாக பதிவான 485 கொரோனா பாதிப்புகளில் 295 பேர் தப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் - நோய் அண்டாத அஸாமையும் விட்டுவைக்கவில்லை!
புதிதாக பதிவான 485 கொரோனா பாதிப்புகளில் 295 பேர் தப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் - நோய் அண்டாத அஸாமையும் விட்டுவைக்கவில்லை!
By : Kathir Webdesk
வியாழக்கிழமை ஒரே நாளில் 485 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 60% (295 நபர்கள்) தப்லிகி ஜமாஅத் ஏற்பாடு செய்த நிஜாமுதீன் மார்க்கஸில் கலந்து கொண்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 3400 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வுக்குப் பிறகும், டெல்லியில் உள்ள நிஜாமுதீன் மார்க்காஸ் மசூதியில் ஆயிரக்கணக்கான ஜமாஅத் உறுப்பினர்கள் தொடர்ந்து கூடி இருந்தனர்.
இந்தியாவில் இதுவரை 2500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை நிலவரப்படி, டெல்லியில் 141 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 88 புதிய வழக்குகளும் பதிவாகியுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை ஜம்மத் உறுப்பினர்கள். டெல்லியில் உறுதிப்படுத்தப்பட்ட 141 வழக்குகளில் 129 ஜமாஅத் உறுப்பினர்கள்.
மக்கள் கூட்டங்களுக்கு எதிராக அரசாங்கத்தின் தடை உத்தரவுகளை மீறி நிஜாமுதீன் மசூதியில் கூடியிருந்த தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளன. ஜமாஅத் உறுப்பினர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள பகுதிகளுக்கு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணம் செய்ததன் விளைவாக சில நாட்களில் நாடு தழுவிய அளவில் பரவலாக பரவியுள்ளது. அரசாங்க அறிக்கையின்படி, இதுவரை 9000 க்கும் மேற்பட்ட தப்லீகி ஜமாஅத் பங்கேற்பாளர்கள் மற்றும் அவர்களின் முதன்மை தொடர்புகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் இதுவரை எட்டிப்பார்க்காத வடகிழக்கு மாநிலமான அசாம், ஒரே நாளில் 16 கொரோனா நோயாளிகளை கண்டறிந்துள்ளது. அவர்கள் அனைவரும் தப்லிகி ஜமாஅத் திரும்பியவர்கள். அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அருணாச்சல பிரதேசம் வரை தப்லீகி உறுப்பினர்கள் கொரோனா வைரஸை பரப்பியுள்ளனர்.
காஜியாபாத்தில் உள்ள எம்.எம்.ஜி மாவட்ட மருத்துவமனையில் தனிமைப்படுத்தலின் போது, ஆறு தப்லீஹி ஜமாஅத் உறுப்பினர்கள் பேன்ட் அணியாமல் வார்டைச் சுற்றி நடந்து, செவிலியர்களிடம் மோசமான சைகைகளைச் செய்ததற்காக உத்தரபிரதேச போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.