வேலை கிடைக்கவில்லை.. எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கி தொடங்கி பக்கா திட்டம் : ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் மகன் உள்பட மூவர் கைது!
வேலை கிடைக்கவில்லை.. எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கி தொடங்கி பக்கா திட்டம் : ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் மகன் உள்பட மூவர் கைது!
By : Kathir Webdesk
கடலூரில் எஸ்பிஐ பெயரில் போலியாக வங்கிக் கிளையை நடத்தி வந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் மகன் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை எந்தவொரு வாடிக்கையாளரும் இந்த கிளை மூலம் எந்தவிதமான பண இழப்பையும் சந்தித்ததாக தெரிவிக்கவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் கமல் பாபு (19), குமார் (42), எம் மணிக்கம் (52) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ கிளைகளின் உள்கட்டமைப்பு, லாக்கர்கள், தொழில்நுட்ப பொருள் மற்றும் பிற ஆவணங்களுடன் செயல்பட்டு வந்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட பாபுவின் தந்தை வங்கி முன்னால் ஊழியர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது மரணத்திற்குப் பிறகு தனது தந்தையின் வேலைக்கு விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது.
வேலை கிடைக்காத நிலையில், போலி வங்கி தொடங்கும் எண்ணம் வந்து இதனை செயல்படுத்தியுள்ளார். போலி வங்கியில், எஸ்பிஐ வங்கியின் பெயரில் போலியாக செலான், காசோலை, முத்திரைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை இருந்ததைப் பார்த்து காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.