Kathir News
Begin typing your search above and press return to search.

27 மணி நேரம் வீட்டைப் பூட்டிக் கொண்டு தலைமறைவான சிதம்பரம் - சொத்து சேர்க்கவே பதவி வெறி : துணை நிற்கும் ஊழல் கட்சி!

27 மணி நேரம் வீட்டைப் பூட்டிக் கொண்டு தலைமறைவான சிதம்பரம் - சொத்து சேர்க்கவே பதவி வெறி : துணை நிற்கும் ஊழல் கட்சி!

27 மணி நேரம் வீட்டைப் பூட்டிக் கொண்டு தலைமறைவான சிதம்பரம் - சொத்து சேர்க்கவே பதவி வெறி : துணை நிற்கும் ஊழல் கட்சி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Aug 2019 9:32 AM GMT


ப.சிதம்பரத்துக்கு ஊழல் கட்சி தான் துணையாக இருக்கும் என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.


இது குறித்து பேசிய அவர், பா.ஜனதா அரசு ஊழல் இல்லாத அரசு. இதனால் தான் தொடர்ந்து 2-வது முறையாக மக்கள் பா.ஜனதாவுக்கு ஆட்சி நடத்த வாய்ப்பு அளித்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பா.ஜ.க யாரையும் திட்டமிட்டு கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் மீது தவறு இருப்பதால்தான் சி.பி.ஐ அதிகாரிகள் அவரை கைது செய்திருக்கிறார்கள். முதலில் ப.சிதம்பரம் மீது ஒரு வழக்கு என்றார்கள். தற்போது ஒன்றன் பின் ஒன்றாக ராணுவம், ஐ.என்.எக்ஸ். உள்ளிட்ட 4 வழக்குகளாகியுள்ளது.


இந்த வழக்குகளில் தொடர்புடைய இந்திரா முகர்ஜி அப்ரூவர் ஆனதால் தற்போது இந்த வழக்குகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. சிதம்பரம் கைது நடவடிக்கையில் உள்நோக்கம் எதுவும் இல்லை. அவர் மீதுள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்திக்க வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 27 மணி நேரம் வீட்டைப் பூட்டிக் கொண்டு தலைமறைவாக இருந்து உள்ளார். தொடர்பு எல்லைக்கு அப்பாலும் இருந்துள்ளார்.


இப்படி இருக்க சி.பி.ஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்ய வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டனர். சி.பி.ஐ அதிகாரிகள் அவர்கள் கடமையை செய்தனர். தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை உண்டு.


விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அதிகாரப்பூர்வமாக தவறு செய்து இருக்கிறார். மக்கள் கொடுத்த வாய்ப்பை சொத்து சேமிப்பதற்காக பயன்படுத்தியிருக்கிறார். சிதம்பரத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பேசிவருகின்றனர். ஊழல்வாதிக்கு ஊழல் கட்சிதான் துணை இருக்கும். இன்று காலை விசாரணையில் தவறு செய்யவில்லை என்றால் சட்ட ரீதியாக நிரூபித்து வெளியே வரட்டும்.


காஷ்மீர் பிரச்சினையை திசை திருப்புவதற்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்பது முற்றிலும் பொய். உச்சநீதிமன்ற நீதிபதியே சிதம்பரம் மீது உள்ள வழக்கின் தன்மை பற்றி பற்றி பேசினார். இதன் மூலம் தெரியவில்லையா அவர் மீது போடப்பட்ட வழக்கின் தன்மை பற்றி" என்று கூறியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News