Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் வேட்டையை தொடங்கிய இராணுவம்- என்கவுன்ட்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை!

காஷ்மீரில் வேட்டையை தொடங்கிய இராணுவம்- என்கவுன்ட்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை!

காஷ்மீரில் வேட்டையை தொடங்கிய இராணுவம்- என்கவுன்ட்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2019 4:52 AM GMT


காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை களையெடுக்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் ராணுவ படை வீரர்களை குவித்து வருகிறது மத்திய அரசு . தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவரயும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சகட்ட பாதுகாப்பில் காஷ்மீர் கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்நிலையில் பாரமுல்லா மாவட்டம் சோப்போர் (Sopore) அருகே, மல்மன்போரா ((Malmanpora)) பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸார் இணைந்து சம்மந்தப்பட்ட பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது.


இதில் ராணுவ வீரர் காயமடைந்தார். தீவிரவாதிகளில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News