Kathir News
Begin typing your search above and press return to search.

தருமபுரம் ஆதீனத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

தருமபுரம் ஆதீனத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

தருமபுரம் ஆதீனத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 April 2020 10:32 AM GMT

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம், சைவ சித்தாந்தத்தை பின்பற்றி தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றும் பணியை செய்து வருகிறது. கொரோனாவால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கும் மருத்துவ பணியில் தருமபுர ஆதீன மடம் இறங்கியுள்ளது.

அந்த வகையில், ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானங்களின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு கபசுர குடிநீர் சந்நிதானங்களின் திருக்கரங்களால் அளிக்கப்பட்டது. ஏராளமான பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கபசுர குடிநீரை பெற்றுக்கொண்டனர்.



கடந்த வாரம் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 11 லட்சம் வழங்கினார். இந்நிலையில், தருமபுரம் ஆதின திருமடத்தில் கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில், மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டடுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News