“ராகுல் காந்தி” என்ற பெயர் சாபக்கேடானது! புலம்புகிறார் மத்திய பிரதேச இளைஞர்!!
“ராகுல் காந்தி” என்ற பெயர் சாபக்கேடானது! புலம்புகிறார் மத்திய பிரதேச இளைஞர்!!
By : Kathir Webdesk
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அவரது தந்தை ராகுல் காந்தி என்று பெயர் வைத்துள்ளார். ஆனால் “ராகுல் காந்தி” என்ற பெயரே சாபக்கேடானது என்கிறார் அந்த இளைஞன்.
இது குறித்து அந்த இளைஞர் கூறியதாவது:-
எனது தந்தை எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றியவர். அதிகாரிகள் அவரை காந்தி என்ற பட்டப்பெயரில் அழைத்துள்ளனர். இதனால் பள்ளியில் என்னை சேர்க்கும் போது, ராகுல் மால்வியா என்ற எனது பெயரை ராகுல் காந்தி என்று சேர்த்துவிட்டனர்.
இந்த பெயரால் எனக்கு ஏராளமான பிரச்சினைகள். ஒரு சிம் கார்டு வாங்க முடியவில்லை. ஓட்டுநர் உரிமம் வாங்க முடியவில்லை. இதுபோல எந்த அலுவலகத்திற்கு போனாலும் எனது பெயரை “ராகுல் காந்தி” என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். அவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்.
இதுவேற, என்னை பப்பு என்று சிலர் அழைக்கின்றனர். முதல் வேலையாக எனது பெயரை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த இளைஞர் கூறியுள்ளார்.