Kathir News
Begin typing your search above and press return to search.

நடக்க இருந்த தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும்? - அரசு அதிரடி அறிவிப்பு!

நடக்க இருந்த தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும்? - அரசு அதிரடி அறிவிப்பு!

நடக்க இருந்த தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும்? - அரசு அதிரடி அறிவிப்பு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 April 2020 5:47 PM IST

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியா மாநிலத்தில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு எப்போது நடைபெறும் என மாணவர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கும் தொடக்கத்திலேயே தேர்வுகளை நடத்தலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் கலை அறிவியல், பொறியியல் உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் இந்தப் பருவ செமஸ்டர் தேர்வுகளை அடுத்த பருவ தொடக்கத்தில் நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதன் பிறகு தான் புதிய பருவத்துக்கான பாடங்கள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News