Kathir News
Begin typing your search above and press return to search.

போதை பொருள் கடத்தி மாட்டிக்கொண்ட தி.மு.க உடன்பிறப்பின் மகன் ! தி.மு.க வின் அடுத்த அவதாரம்!

போதை பொருள் கடத்தி மாட்டிக்கொண்ட தி.மு.க உடன்பிறப்பின் மகன் ! தி.மு.க வின் அடுத்த அவதாரம்!

போதை பொருள் கடத்தி மாட்டிக்கொண்ட தி.மு.க  உடன்பிறப்பின் மகன் ! தி.மு.க வின் அடுத்த அவதாரம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Aug 2019 6:08 AM GMT


திருப்பூரில் தி.மு.க., கொடி கட்டிய காரில், தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.


இலங்கையிலிருந்து தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிய தகவலால், திருப்பூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது மங்கலம் ரோட்டில், ஆண்டிபாளையம் சோதனை சாவடியில், சென்ட்ரல் காவலர்கள் வாகனங்களை சோதனை செய்தனர். நேற்று மாலை 4:00 மணியளவில், தி.மு.க., கட்சி கொடியுடன் வந்த வாகனத்தை , TN -39 CF -2074 சோதனையிட்டனர்.அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் பாக்கெட்டுகள் 52 கிலோ இருந்தது.அதிர்ச்சியடைந்த போலீசார் மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்து, அதில் வந்த இருவரையும் கைது செய்தனர்.


காவல் துறை விசாரணையில், குள்ளேகவுண்டம்பாளையத்தை ரே்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார், 25 மற்றும் நாச்சம்மாள் காலனியை சேர்ந்த பீமாராவ் மகன் ஞானப்பிரகாஷ், 32 என்பதும் தெரிந்தது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சுற்று பகுதியில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிந்தது.சதீஷ்குமார் தந்தை முருகேசன், தி.மு.க.,வை சேர்ந்தவர். இதனால், கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில், கொண்டு சென்றால், போலீசில் சிக்க மாட்டோம் என்ற எண்ணத்தில், இதில் நீண்ட காலமாக அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.


https://www.dinamalar.com/news_detail.asp?id=2351212


Next Story
கதிர் தொகுப்பு
Trending News