எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதில் தவறில்லை - அ.தி.மு.க அதிரடி!
எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதில் தவறில்லை - அ.தி.மு.க அதிரடி!
By : Kathir Webdesk
சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மண்டல அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது, தவறு ஏதும் இல்லை நல்ல விஷயம்தான்" என தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி இருக்கும் நேரத்தில் தற்காலிகமாகத்தான் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறுதுளி பெருவெள்ளம் என்று எண்ணி 'சேமிப்பு' என்று மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாகவும் இதை நல்ல விஷயமாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் இதில் எந்தத் தவறும் இல்லை, மத்திய அரசு ஒன்றும் நிரந்தரமாக நிதியை நிறுத்தவில்லை, இரண்டு வருடங்களுக்கு தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.