Kathir News
Begin typing your search above and press return to search.

அழகு நிலையத்தில் கொள்ளையடித்த திருமாவளவன் கட்சியின் வேளச்சேரி பகுதி அமைப்பாளர் கைது!!

அழகு நிலையத்தில் கொள்ளையடித்த திருமாவளவன் கட்சியின் வேளச்சேரி பகுதி அமைப்பாளர் கைது!!

அழகு நிலையத்தில் கொள்ளையடித்த திருமாவளவன் கட்சியின் வேளச்சேரி பகுதி அமைப்பாளர் கைது!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 July 2019 9:25 AM GMT



திருவல்லிகேணியை சேர்ந்தவர் சரவணன். இவர் நீலாங்கரையை அடுத்த வெட்டுவங்கேணி காமராஜ் நகரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.


இந்த அழகு நிலையத்துக்குள் 2 வாலிபர்கள் வந்து வரவேற்பு பகுதியில் இருந்த பெண்ணிடம் கட்டண விவரங்களை கேட்டுவிட்டு சென்றனர். பின்னர் அந்த 2 வாலிபர்களுடன் 4 பேர் திடீரென அழகு நிலையத்துக்குள் புகுந்துள்ளனர்.


அவர்கள் திடீரென வரவேற்பு பகுதியில் இருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டினர். அப்பெண் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினையும், ரூ.7 ஆயிரத்தையும் பறித்தனர். அவைகளை எடுத்துக்கொண்டு 2 வாலிபர்கள் தப்பி சென்றனர். மற்ற 4 பேரும் அழகு நிலையத்தில் மேலும் பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தனர்.


அப்போது சத்தம் கேட்டு ஜீவா என்பவர் அழகு நிலையத்தினுள் நுழைந்தார். அழகு நிலையத்துக்குள் மர்ம கும்பல் பெண்ணை மிரட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அழகு நிலையத்தின் கதவை பூட்டிவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.


போலீசார் விரைந்து வந்து அழகு நிலைய கதவை திறந்து உள்ளே சென்று கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.


விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரத்தை சேர்ந்த தர்மா, திருவான் மியூரை சேர்ந்த குமரன், சின்ன நீலாங்கரை குப்பம் பகுதியை சேர்ந்த பிரபாகரன், சூரியா என்பது தெரியவந்தது. குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் வேளச்சேரி பகுதி அமைப்பாளராக உள்ளான். மற்றவர்களும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


பணம், நகையை பறித்து கொண்டு தப்பி ஓடியது பள்ளிகரணையை சேர்ந்த சதீஷ், வெட்டுவங்கேணியை சேர்ந்த விக்னேஷ் என்பதும் தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்து நகை-பணத்தை மீட்டனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News