Begin typing your search above and press return to search.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம்: வரும் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் !
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம்: வரும் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் !
By : Kathir Webdesk
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமிகள் எழுந்தருளி நேற்று பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.
முன்னதாக சுவாமி வீதி உலாவின் போது நான்கு மாட வீதியின் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா...கோவிந்தா என்ற கோஷத்துடன் வழிபட்டனர். வீதி உலாவின்போது பெண்கள் கோலாட்டம் போட்டு ஆடிவந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 30ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் 8ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற உள்ளது. பிரம்மோற்சவத்துக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தொடகியுள்ளன.
Next Story