பாஜக முயற்சியால் இனி ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்பட உள்ளது!
பாஜக முயற்சியால் இனி ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்பட உள்ளது!
By : Kathir Webdesk
இதுகுறித்து தமிழக பா.ஜ.க.வின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். அந்தக் கோரிக்கை மனுவில் தி.மு.க. கடந்த 60 ஆண்டு காலங்களில் திருவள்ளுவரின் உண்மை வரலாற்றை மறைத்து தமிழர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் பெரும் துரோகம் இழைத்து விட்டதாகவும் , அவர்கள் தமிழையும் திருவள்ளுவரும் வெறும் அவர் அரசியல் நோக்கத்திற்காக மட்டும்தான் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அவர்கள் மக்களிடம் அதைக் கொண்டு செல்லவில்லை என்பது குற்றஞ்சாட்டபட்டுள்ளது. பாரதப் பிரதமர் அவர்கள் திருக்குறளை உலக அரங்கில் கொண்டு சென்று நமது தமிழர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும்.
இந்த கோரிக்கையை பரிசீலித்து செயல்வடிவம் கொடுக்குமாறு தமிழக பா.ஜ.கவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். இது குறித்து ட்விட்டரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் நிர்மல் குமார் அவர்களுக்கு பதில் அளித்துள்ளார், மிக விரைவில் தமிழக முதல்வர் அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.