Begin typing your search above and press return to search.
நாளை நடக்கும் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரை சமநிலை ஆக்குமா?
நாளை நடக்கும் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரை சமநிலை ஆக்குமா?

By :
இந்தியா கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று ஐந்து டி20 போட்டிகள் ,மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது.
இந்த நிலையில் டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. பின்னர் ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது.
மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா வீரர்கள் கடும் பயிற்சியில் உள்ளனர். நாளை நடக்கும் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரை சமநிலை ஆக்குமா என்று பொறுத்து இருந்து பாப்போம்.
போட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு தொடங்கிறது.
Next Story