Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா வைரஸ் குறித்த உண்மையை மூடி மறைத்த சீனா - 6.5 டிரில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோர இங்கிலாந்து முடிவு!

கொரோனா வைரஸ் குறித்த உண்மையை மூடி மறைத்த சீனா - 6.5 டிரில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோர இங்கிலாந்து முடிவு!

கொரோனா வைரஸ் குறித்த உண்மையை மூடி மறைத்த சீனா - 6.5 டிரில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோர இங்கிலாந்து முடிவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 April 2020 9:31 AM GMT

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிட்டதற்காக இங்கிலாந்தில் உள்ள கன்சர்வேடிவ் எம்.பி.க்கள் சீனாவை நோக்கி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் லண்டனை தளமாகக் கொண்ட கன்சர்வேடிவ் சிந்தனைக் குழு சீனா மீது சட்டரீதியாக வழக்குத் தொடர வாய்ப்புகளை ஆராய்ந்துள்ளது.

60,000 க்கும் அதிகமான இறப்புகளையும், டிரில்லியன் கணக்கான டாலர்களை பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றுநோயை மூடிமறைத்ததற்காக சீனாவிற்கு எதிராக சர்வதேச சட்டத்தின் கீழ் டிரில்லியன் கணக்கான டாலர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும்" என்று லண்டன் தி சண்டே மார்னிங் ஹெரால்டு தெரிவித்துள்ளது.

ஹுகான் கடல் உணவு மொத்த சந்தையில் காட்டு விலங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டன" , சண்டே மார்னிங் ஹெரால்டு அறிக்கை கூறியது. சர்வதேச சுகாதார விதிமுறைகள் உட்பட 10 சாத்தியமான சட்ட வழிகளின் கீழ் சீனா மீது வழக்குத் தொடரலாம் என்று அறிக்கை கூறுகிறது.

ஆரம்ப கட்டத்தில் துல்லியமான தகவல்களை வழங்குவதற்கு சீனா பொறுப்பேற்றிருந்தால், "தொற்று சீனாவை விட்டு வெளியேறியிருக்காது" என்று அறிக்கை கூறுகிறது. முதலில் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என்று கூறி உண்மையை மறைத்துள்ளது.

தி ஹென்றி ஜாக்சன் சொசைட்டி படி, சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு மாறாக சீனா செயல்பட்டது, சர்வதேச அளவில் பரவக்கூடிய எந்தவொரு நோய்க்கிருமிகளின் பரவல், தீவிரம் மற்றும் பரவுதல் தொடர்பான தரவுகளை நாடுகள் கண்காணித்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

சீனாவில் நோய் குறித்த உண்மையை சொல்ல முயன்ற மருத்துவர்களை தண்டித்தது உட்பட பல முறைகேடுகளில் சீனா ஈடுபட்டுள்ளது. சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் சீனாவுக்கு எதிராக வழக்குத் தொடர WHO வழிமுறைகளை வழங்குகியுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News