Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்கப் போராடிய VHP பிரமுகர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை.!

மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்கப் போராடிய VHP பிரமுகர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை.!

மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்கப் போராடிய VHP பிரமுகர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 3:02 AM GMT

மத்திய பிரதேசம் ஹோஷங்காபாத் மாவட்டம் விஸ்வ இந்து பரிஷத் கௌ ரக்சாபிரிவின் மாவட்ட பொறுப்பாளர் ரவி விஸ்வகர்மா, இவருக்கு வயது 35. இவர் ஹோஷங்காபாத்தில் இருந்து மற்ற இருவருடன் காரில் திரும்பி வந்தபோது, கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் ஒரு குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவர் ஒரு பசு பாதுகாப்பு குழுவுடன் தொடர்புடைய நிர்வாகி என்றும், போபாலில் இருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள பிபாரியா நகரில் இந்த சம்பவம் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மற்ற இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்." என்று போலீஸ் அதிகாரி சதீஷ் அந்த்வான் செய்தியாளர்களிடையே கூறினார்.

"நாங்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவர்களைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன." என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

வி.ஹெச்.பியின் செயல்பாட்டாளர் கோபால் சோனி கூறுகையில் "இது ஒரு திட்டமிட்ட கொலை" என்று கூறினார். "விஸ்வகர்மா வி.எச்.பி.யின் கௌ ரக்சா பிரிவின் மாவட்டத் தலைவராக பசுக்களின் பாதுகாப்பிற்காக பணியாற்றி வந்தார். அவரது கொலை குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்" என்று திரு சோனி கூறினார்.

Ravi Vishawakarma District president Gau Raksha wing was shot dead in Pipariya @VHPDigital says it was a pre planned murder @DGP_MP registered a case and efforts are on to nab the accused @ndtvindia @ndtv @RSSorg @INCIndia #PostponeneetJee #SushanthSinghRajput #chinaindiaborder pic.twitter.com/hJWdLbpyyx

— Anurag Dwary (@Anurag_Dwary) June 27, 2020

Next Story
கதிர் தொகுப்பு
Trending News