இந்தியா அழைத்து வருவதை தவிர்க்கவே விஜய் மல்லையா நாடகம் ஆடுகிறார் - மத்திய அரசு.! #Vijaymallaya #CBI #CentralGovt
இந்தியா அழைத்து வருவதை தவிர்க்கவே விஜய் மல்லையா நாடகம் ஆடுகிறார் - மத்திய அரசு.! #Vijaymallaya #CBI #CentralGovt
By : Kathir Webdesk
விஜய் மல்லயா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வங்கிக் கடனுக்காக 14 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்துவதாக கூறுவது நம்பகமானது அல்ல என்றும் போலியான வாக்குறுதிகளை தருவது அவருக்கு பழக்கம் என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது. வங்கிகளிடம் பெற்ற கடனுக்காக 14 ஆயிரம் கோடி ரூபாய் செட்டில்மெண்ட் தொகையாக செலுத்த தயாராக இருப்பதாக தொழிலதிபர் விஜய் மல்லய்யா சார்பில் அவருடைய வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்துள்ளார்.
லண்டனில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அதில் விஜய் மல்லய்யாவை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைளில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தவிர்க்கவே இப்படியொரு மனுவை விஜய் மல்லய்யா தாக்கல் செய்திருப்பதாகவும், போலியான வாக்குறுதிகளை பலமுறை அவர் அளித்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.