இந்திய மக்களுக்காக கொரோனா நிவாரண நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா சர்மா!
இந்திய மக்களுக்காக கொரோனா நிவாரண நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா சர்மா!

கொரோனா வைரஸ் தொற்றறை தடுக்கும் நடவடிக்கைக்காக பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் நிவாரண நிதி உதவியை விராட் கோலி - அனுஷ்கா சர்மா வழங்கினார்கள்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் 38 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைக்காக மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலியும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் வீட்டிலேயே இருங்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார்.
இந்தத் தருணத்தில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவும் வகையில் பிரதமர் மற்றும்மகாராஷ்டிரா முதல் அமைச்சர் ஆகியோரின் நிவாரண நிதிக்கு குறிப்பிட்ட நிதியை நானும் அனுஷ்கா சர்மாவும் வழங்கி உள்ளதாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
தங்கள் எவ்வளவு தொகை வழங்கினோம் என்ற விவரங்களை பற்றி அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிடவில்லை.