அனுஷ்காவுடனான முதல் சந்திப்பை பகிர்ந்து கொண்ட விராட் கோலி.!
அனுஷ்காவுடனான முதல் சந்திப்பை பகிர்ந்து கொண்ட விராட் கோலி.!
By : Kathir Webdesk
அனுஷ்கா சர்மாவுடனான முதல் சந்திப்பில் என்ன செய்வது எப்படி பேசுவது என்று தெரியாமல் நகைச்சுவையாக பேசினேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். கடந்த 2013ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை முதல் முறையாக சந்தித்துள்ளார். அடுத்தடுத்த சந்திப்பில் மலர்ந்த காதலால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
அனுஷ்கா சர்மாவுடனான முதல் சந்திப்பில் நடந்ததைப் பற்றி பகிர்ந்து கொண்ட கோலி கூறியது: முதல் முறையாக அனுஷ்கா சர்மாவுடனான சந்திப்பில் எனக்கு சற்று பதட்டமாக இருந்தது. என்ன செய்வது, என்ன பேசுவது என்பதை தெரியாமல் சிந்தித்து இருந்தேன். அந்த சமயத்தில் நகைச்சுவையாக பேசினேன்.
ஏதோ ஒன்றை சொன்னேன் அது என்னவென்று தெரியவில்லை. ஆனால், என்னுடைய நகைச்சுவை சற்று வித்தியாசமாக இருந்தது.
இவ்வாறு விராட் கோலி மற்றும் அனுஷ்காவுடனான முதல் சந்திப்பில் பேசியது.