Kathir News
Begin typing your search above and press return to search.

கைதுக்கு முன்னால் சிதம்பரம் எங்கே ஒளிந்திருந்தார் ?? விட்டுப் பிடித்த சிபிஐ, வெளி வந்த உண்மைகள் !!

கைதுக்கு முன்னால் சிதம்பரம் எங்கே ஒளிந்திருந்தார் ?? விட்டுப் பிடித்த சிபிஐ, வெளி வந்த உண்மைகள் !!

கைதுக்கு முன்னால் சிதம்பரம் எங்கே ஒளிந்திருந்தார் ?? விட்டுப் பிடித்த சிபிஐ, வெளி வந்த உண்மைகள் !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Aug 2019 1:22 PM GMT


முன்னாள் நிதி அமைச்சர், சிதம்பரத்தை, ஊழல் வழக்கில், சி.பி.ஐ., கைது செய்து, நாளை திங்கள் கிழமை வரை விசாரணைக்கு எடுத்திருக்கிறது.


ஆனால், சிதம்பரத்தின் முன்ஜாமினை, டில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்த உடனேயே, சி.பி.ஐ., அவரை கைது செய்யவில்லை. சிதம்பரம் திடீரென மாயமானார்; எங்கே சென்றார் என, யாருக்கும் தெரியவில்லை.ஒரு நண்பர் வீட்டில், சிதம்பரம் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது, சி.பி.ஐ.க்கு தெரிந்திருந்தும், அவரை கைது செய்ய முயற்சிக்கவில்லையாம். சி.பி.ஐ., சில காரணங்களுக்காக அப்படி விட்டுப் பிடித்தது. கைதாவதற்கு முன், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான அகமது படேல் வீட்டிற்கு, சிதம்பரம் சென்றார். அங்கிருந்தபடி, காங்., தலைவர் சோனியாவிடம் போனில் பேசிவிட்டு,காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதன் பிறகே, சி.பி.ஐ., அவரை கைது செய்தது. சிதம்பரம் கைதை எதிர்த்து, காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலும், இந்தப் போராட்டங்கள் பெரிய அளவில் நடக்கவில்லை. அதே போல, எதிர்க்கட்சித் தலைவர்களும், சிதம்பரம் கைதான முறை குறித்து தான் விமர்சித்தனரே தவிர, அவர் மீதான வழக்கு குறித்து வாய் திறக்கவில்லை.பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்த பிறகும், நிதி அமைச்சகத்தில் சில சீனியர் அதிகாரிகள், சிதம்பரத்திற்கு ஆதரவாக செயல்பட்டிருக்கின்றனர். இதனால் தான், அவரை உடனடியாக கைது செய்ய முடியவில்லை.


'ஐ.என்.எக்ஸ்., மீடியா' நிறுவன உரிமையாளர்களுள் ஒருவரான, இந்திராணி முகர்ஜி அப்ரூவராக ஆன பிறகு, அவர் கொடுத்த தகவல்களை வைத்து தான்,சிதம்பரத்தை கைது செய்ய முடிந்ததாம். இதற்கிடையே, சி.பி.ஐ., அதிகாரி ஒருவர், சிதம்பரம் மகன் கார்த்தி கைது பற்றி, ஒரு விஷயத்தை சொன்னார்.-'நாங்கள் கார்த்தியை கைது செய்த போது, அவர் எங்களை கடுமையாக வசை பாடினார். 'லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்; நான் அமைச்சர் ஆவேன்; அப்போது உங்களை கவனித்துக் கொள்கிறேன்' என, எங்களை மிரட்டினார். ஆனால், நாங்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. இவரைப் போல, எத்தனை பேரை நாங்கள் பார்த்திருப்போம்' என்றார் அவர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News