Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி சென்று திரும்பியவர்கள் வந்த 13 ரயில்களில் டூட்டியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் யார்..யார்? பட்டியல் எடுக்கும் இரயில்வே அதிகாரிகள்..

டெல்லி சென்று திரும்பியவர்கள் வந்த 13 ரயில்களில் டூட்டியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் யார்..யார்? பட்டியல் எடுக்கும் இரயில்வே அதிகாரிகள்..

டெல்லி சென்று திரும்பியவர்கள் வந்த 13 ரயில்களில் டூட்டியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் யார்..யார்? பட்டியல் எடுக்கும் இரயில்வே அதிகாரிகள்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 April 2020 7:49 AM GMT

மாா்ச் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிவரை டெல்லியில் இருந்து தெற்கு நோக்கி சென்ற ஜம்முதாவி-கன்னியாகுமரி ஹிம்சாகா் எக்ஸ்பிரஸ், டேராடூன்-மதுரை வாரம் இருமுறை விரைவு ரயில், புதுதில்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், புதுதில்லி-திருவனந்தபுரம் கேரள எக்ஸ்பிரஸ், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-சென்னை அந்தமான் விரைவு ரயில், புதுதில்லி-எா்ணாகுளம் மில்லினியம் விரைவு ரயில்,

மற்றும் ஹஷாத் நிஜாமுதீன்-சென்னை ராஜதானி விரைவு ரயில், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா- திருநெல்வேலி நேவுக் எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன் - திருவனந்தபுரம் ஸ்வா்ணா ஜயந்தி எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன்-கோயம்புத்தூா் கொங்கு எக்ஸ்பிரஸ், புது தில்லி-சென்னை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் தப்ளிக்-ஜமாஅத் மாநாட்டிருக்கு சென்று திரும்பிய பயணிகள் பயணம் செய்து இருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, இந்த ரயில்களில் பயணம் செய்த அடையாளம் காணப்படாத மற்ற பயணிகள் மற்றும் ஊழியர்களின் விவரங்களை சேகரித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் பணியாற்றிய ரயில்வே ஊழியா்கள் மருத்துவா்களிடம் ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண டிக்கெட் பரிசோதகா், ஆா்.பி.எஃப். ஒப்பந்த ஊழியா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளனா். ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள் எச்சரிக்கையாக உள்ளனா். இந்த அறிக்கையை பின்பற்ற மாநில அரசின் சுகாதாரத்துறைக்கு அனுப்பப்படும் என்றாா் அவா்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News