ஊரடங்கை மீறி போலீசாரை தாக்கிய தாய், மகன் கைது..
ஊரடங்கை மீறி போலீசாரை தாக்கிய தாய், மகன் கைது..
By : Kathir Webdesk
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் லாலாபேட் சோதனைச்சாவடி அமைந்துள்ளது, அந்தச் சோதனைச் சாவடியில் வழக்கம்போல் போலீசார் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒரு இருசக்கர வாகனத்தில் 3 பேர் அந்தச் சோதனைச் சாவடி அருகே வந்த போது அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் மற்றும் போலீசாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அரங்கில் இருந்த கட்டையை எடுத்துக்கொண்டு போலீசாரை தாக்க முயன்றான், அவரை அருகில் இருந்த போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றபோது அவரது தாய் போலீசாரின் சட்டையைப் பிடித்துக் கொண்டு தாக்கினார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் போலீசாரை தாக்க முயன்ற இரண்டு பேரின் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டனர், இதனை அடுத்து இரண்டு பேரின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
https://twitter.com/ani_digital/status/1246227693214916609?s=19