தளர்வுகள் தடுப்பூசி போடாதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்: WHO இயக்குனர் கடும் எச்சரிக்கை.!
பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவது கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனர் இயக்குனர் டெட்ரோஸ் அதோனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By : Thangavelu
பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவது கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனர் இயக்குனர் டெட்ரோஸ் அதோனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகளை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது அச்சுறுத்தி வருகிறது. அதிப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதால் அதனை எதிர்த்து போராடுவதற்காக உலக நாடுகள் பல்வேறு வகையிலான முன்னெச்சரிக்கையை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளை தளர்த்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஒரே இடங்களில் பல ஆயிரம் பேர் கூடி வருகின்றனர்.
இது போன்ற சமயங்களில் மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தளர்வுகளை தளர்த்துவதால் தடுப்பூசி போடாதவர்களுக்கு மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தும். எனவே தளர்வுகளை நிறுத்திவிட்டு ஊரடங்கை கடுமையாக்குங்கள் என இந்தியா உள்ளிட்ட மற்ற உலக நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.