இரண்டாவது உலகப் போர் வென்றதுடன், கொரோனா எதிரான போரிலும் வெற்றி பெற்ற 99 வயது முன்னாள் ராணுவ அதிகாரி, சுவாரஸ்ய தகவலைகள்.!
இரண்டாவது உலகப் போர் வென்றதுடன், கொரோனா எதிரான போரிலும் வெற்றி பெற்ற 99 வயது முன்னாள் ராணுவ அதிகாரி, சுவாரஸ்ய தகவலைகள்.!
By : Kathir Webdesk
இரண்டாவது உலகப் போர் நடைபெற்ற போது பிரேசில் நாட்டின் ராணுவ அதிகாரியாக வேலை பார்த்தவர் எர்மேண்டோ பைவெட்டா. இவருக்கு தற்போது 99 வயது ஆகிறது. சில நாள்களுக்கு முன்பு இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
பின்னர் இவரை ராணுவ அதிகாரிகளுக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது. மேலும் எட்டு நாட்களுக்குப் பிறகுகொரோனா வைரஸ் போராட்டத்தில் இருந்து இவர் தற்போது குணம் அடைந்துள்ளார்.
ராணுவத்தினர் அணியும் தொப்பியை இவர் அணிந்து இரு கைகளையும் வானை நோக்கும் படி மருத்துவமனையில் இருந்து விடைபெற்றார். இவருக்கு மருத்துவமனையில் வேலை பார்ப்பவர்கள் பேண்ட் வாத்தியம் மற்றும் கைகளை தட்டி உற்சாகத்துடன் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இரண்டாவது உலகப் போர் நடைபெற்றதில் பிரேசில் ராணுவம் வென்று 75ஆம் ஆண்டு கொண்டாடப்படும் நாளில் இவர் சிகிச்சை பெற்று நலமாக வீடு திரும்பினார். எனவே கொரோனாவை எதிரான போரில் இவர் வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்தது.