Kathir News
Begin typing your search above and press return to search.

யாசின் மாலிக் குற்றவாளி - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! தண்டனை என்ன?

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

யாசின் மாலிக் குற்றவாளி - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! தண்டனை என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  19 May 2022 12:17 PM GMT

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.


காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் சதித் திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி என டெல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் மே 25'ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும், காஷ்மீரில் நடைபெற்ற பல்வேறு குற்றங்களுக்கு இவர் மூலாதாரமாக விளங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது, மேலும் தண்டனை விபரங்கள் மே 25ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - Asianet Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News